Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
திருப்பூர்: தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், கரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சேகரிக்கப்படும சளி மாதிரி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இங்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களுக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT