டாஸ்மாக் பார்கள், ஹோட்டல் பார்கள் மூடல் :

டாஸ்மாக் பார்கள், ஹோட்டல் பார்கள் மூடல் :
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் மூடப்பட்டன.

கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்கள் மற்றும் ஹோட்டல்களில் செயல்படும் மதுபான பார்களை மறு உத்தரவு வரும் வரை மூடட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என கரூர் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்திருந்தார். இதை யடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள், ஹோட்டல்களில் செயல்பட்டு வந்த மதுபான பார்கள் நேற்று மூடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in