Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

சீரான மின்சாரம், சாக்கடை வசதி கோரி சாலை மறியல் :

கீழப்பழுவூரை அடுத்த வண்ணம் புத்தூர் காலனி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகு திக்கு சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும், சீரான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வடிகால் வசதி செய்து தரவேண்டும் எனக் கோரி கீழப் பழுவூர்- திருமழபாடி சாலையில் கிராம மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கீழப்பழு வூர் போலீஸார் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x