திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் - 2,500 மூட்டை மஞ்சள் ரூ.1.30 கோடிக்கு விற்பனை :

திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் -  2,500 மூட்டை மஞ்சள்  ரூ.1.30 கோடிக்கு விற்பனை :
Updated on
1 min read

திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் 2,500 மூட்டை மஞ்சள் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டது.

திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சளை, இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் மஞ்சளை சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துச் செல்வது வழக்கம்.

இதன்படி நேற்று முன்தினம் திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,042 முதல் ரூ.10,929 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.6,903 முதல் ரூ. 8,252 வரையும், பனங்காளி மஞ்சள் ரூ.12,222 முதல் ரூ.22,000 வரை என மொத்தம் 2,500 மூட்டை மஞ்சள் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in