

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த அயப்பாக்கம், ஐயப்பா நகர், காந்தி தெருவில் வசித்து வருபவர் பிரேம்குமார் (38). இவர், அயப்பாக்கம் பகுதியில் வாட்டர் கேன் போடும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன இவருக்கு, கலை என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் பிரேம்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, சம்பளப் பணத்தை வீட்டில் கொடுக்காமல் தினமும் மது அருந்திவிட்டு வருகிறீர்களே, குடும்ப செலவுக்கு என்ன செய்வது என்று மனைவி கலை கண்டித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி