வேளாண் பயிற்சி முகாம் :

வேளாண் பயிற்சி முகாம் :
Updated on
1 min read

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகர் மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.

இதில் அங்கக வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் ராஜாபாபு வரவேற்றார். நரிக்குடி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர் யாமினி, அங்கக வேளாண்மை பற்றி தொழில் நுட்ப உரையாற்றினார்.

வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர்கள் நிர்மலா, ராம்குமார், விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரையாற் றினர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.னிவாசன் சிறப்புரை யாற்றினார். அலுவலர்கள், வேளாண் களப்பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகள், விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர் ராஜாபாபு மற்றும் திட்ட உதவியாளர்கள் கோகிலா, அமீனுதின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். உதவிப் பேராசிரியர் வேணுதேவன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in