ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த - மூதாட்டியை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு :

ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த  -  மூதாட்டியை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு :
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர் ஒருவர் கம்பியால் தாக்கி 10 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், தங்கப்பா நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரது மனைவி ராஜாத்தி (63), இவரது வீட்டின் பின்புறமாக நுழைந்த மர்ம நபர் ஒருவர் ராஜாத்தியை கம்பியால் தலையில் பலமாகத் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். பிற்பகலில் ராஜாத்தியின் மகன் வீடு திரும்பியபோது தனது தாயார் தாக்கப்பட்டு மயங்கிய நிலைமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தனது தாயாரை சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. கார்த்திக் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in