Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

ஜெயங்கொண்டம் அருகே பழைய பேப்பர் கடையில் தீ விபத்து :

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பழைய பேப்பர் கடையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

ஜெயங்கொண்டத்தை அடுத்த கீழ குடியிருப்பு சவுந்தரபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சித்திரைகனி(60). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு, பேப்பர், பிளாஸ்டிக் கொள்முதல் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அங்கு பழைய பாட்டில்களை சுத்தம் செய்து திரும்பவும் கம்பெனிக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, கடை முழுவதும் தீ பரவியது. இதன் காரணமாக கடையில் வைத்திருந்த பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x