கடலூர் தாழங்குடாவில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு :

சுப்ரமணியன்.
சுப்ரமணியன்.
Updated on
1 min read

கடலூர் தாழங்குடா பகுதியில் மீனவர் ஒருவர் மர்மமான முறை யில் உயிரிழந்து கிடந்தார்.

கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்(63). மீனவர். இவருக்கு 2 மனைவிகள். 2 மனைவிகளும் உயிரிழந்து விட்டனர். 2-வது மனைவியின் மகள் இந்துமதிக்கு வரும் 26-ம்தேதி நிச்சயதார்த்தம் செய்ய சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருந் தார். நேற்று முன்தினம் தேவனாம்பட்டினத்தில் உள்ள முதல் மனை வியின் மகன் தமிழ்ச்செல்வியிடம் நிச்சயதார்த்த செலவுக்கு ரூ.10 ஆயிரம் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சுப்ரமணியன் காலில் சிறு காயங்களுடன் தாழுங்குடா பகுதியில் உள்ள புத்துகோவில் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தேவனாம்பட்டினம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுப்ரமணியன் கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in