Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

லஞ்சம்: விஏவுக்கு 4 ஆண்டு சிறை :

திருப்பத்தூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு சிவகங்கை நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

நடுவிக்கோட்டை கீழை யூர் விஏஓவாக 2006-ல் பணி புரிந்தவர் நாடிமுத்து. இவர் நடுவிக்கோட்டையைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரிடம் புதிய குடும்ப அட்டைக்காக ரூ.200 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பிடிபட்டார்.

இது தொடர்பான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன், குற்றம் சாட்டப்பட்ட நாடிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x