Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

சாலை விபத்தில் இளைஞர் மரணம் :

ராமநாதபுரம் மாவட்டம், திரு வாடானை வட்டம் ஓரியூர் 5-வது தெருவைச் சேர்ந்த சூசைஅருள் மகன் லூர்து ஆல்வின்(29). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏப்.26-ல் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் ஊர் திரும்பியுள்ளார்.

நேற்று காலை ஓரியூரில் இருந்து தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப் பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த லூர்து ஆல் வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து எஸ்.பி.பட்டிணம் போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x