திருப்பத்தூர் சாலை விபத்தில் : பிளஸ் 2 மாணவர் மரணம் :

திருப்பத்தூர் சாலை விபத்தில்  : பிளஸ் 2 மாணவர் மரணம் :
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பைச் சேர்ந்த கருப்பையா மகன் சதீஷ் (17). அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் மகன் கோபி (17). இருவரும் பிளஸ் 2 மாணவர்கள். இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கோபி ஓட்டினார். வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் இருவரும் விழுந்தனர். இதில் காயமடைந்த இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சதீஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோபி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in