Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

பைக் மீது லாரி மோதி புதுமாப்பிள்ளை மரணம் :

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லல் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா மகன் குணராஜா (34). இவருக்கும் காயத்திரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முதுகுளத்தூரில் குளிர்பானக் கடை வைத்திருந்த குணராஜா மனைவியுடன் அங்கேயே வசித்து வந்தார்.

நேற்று காலை பைக்கில் ராமநாதபுரத்துக்கு புறப்பட்டார். திருஉத்திரகோசமங்கை- மல்லல் இடையே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் குணராஜா பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தோர் இவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள், குணராஜா வரும் வழியில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருஉத்திர கோசமங்கை போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x