Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

கமுதியில் தனியார், அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: 6 பேர் மீது வழக்கு :

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வு மையம் அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் செய்முறைத் தேர்வுக்குச் சென்ற கோட்டைமேடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அரசுப் பள்ளி மாணவர்கள் செய்முறைத் தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பொன்முருகன், புவிக்கண்ணன் ஆகியோரைத் தாக்கினர். இதில் காயமடைந்த மாணவர்கள் கமுதி அரசு மருத்து வமனையில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து சத்திரிய நாடார் பள்ளிச் செயலர் சிவமுருகன் கொடுத்த புகாரின் பேரில், கோட்டைமேடு அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் மீது கமுதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x