வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் குன்னத் தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று(ஏப்.22) தொடங்கப்பட உள்ளது.

குன்னத்தில் புதிதாக நீதிமன் றம் தொடங்கும் முடிவை நீதித் துறை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணி புறக்கணிப்பு, உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இதே கோரிக் கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in