Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

நாகை வாக்கு எண்ணும் மையத்தின் மேல் - டிரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு : பிடிபட்ட 3 பேரிடம் போலீஸ் விசாரணை

நாகப்பட்டினம்

நாகை வாக்கு எண்ணும் மையத் தின் மேல் நேற்று டிரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி வளா கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாது காப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் வாக் குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு மேல் நேற்று காலை ஒரு டிரோன் கேமரா பறந்து சென்றது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் குவிந்தனர். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீஸார் ஆகியோரை திமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டு, டிரோன் கேமரா பறந்தது எப்படி? யார் பறக்க விட்டது என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால், திமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

டிரோன் கேமராவை பறக்க விட்டது யார் என்பதை கண்டறிய நாகூர் மற்றும் வெளிப்பாளையம் போலீஸார், இஜிஎஸ் கல்லூரி வளாகத்தைச் சுற்றிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்லூரிக்கு அருகில் செல்போனுடன் நின்றி ருந்த 3 பேரை போலீஸார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சென்னையை சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், 3 பேரை யும், போலீஸார் நாகூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x