Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

புதைக்கப்பட்ட ரவுடியின் சடலம் மறுகூறாய்வு :

கும்பகோணம் அருகே தாராசு ரத்தில் புதைக்கப்பட்ட ரவுடியின் சடலம், உயர் நீதிமன்ற உத்தரவுபடி நேற்று மீண்டும் தோண்டியெ டுக்கப்பட்டு, மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

கும்பகோணம் அருகே தாரா சுரம் எம்ஜிஆர் காலனியில் வசித்தவர் சிலம்பரசன்(30). இவர், சென்னையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவ ருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர் மீது சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இதனால், போலீஸாரின் ரவுடி பட்டியலில் இருந்தார். சிலம்பரசன் கடந்த 9-ம் தேதி தனது பெற்றோரை பார்க்க தாராசுரத்துக்கு வந்துள்ளார். இதையறிந்த தாலுகா போலீஸார் அன்றிரவு சிலம்பரசனை கைது செய்ய சென்றனர்.

போலீஸாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்ற சிலம்பரசனை, போலீஸார் பின்தொடர்ந்து விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அப்போது, சிலம்பரசன் தாராசுரம் எம்ஜிஆர் காலனியில் உள்ள குளத்துக்குள் குதித்து மூழ்கி மறைந்தார்.

மறுநாள் (ஏப்.10) காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, சிலம்பரசன் உடலில் ரத்தக் காயங்களுடன் தண்ணீருக்குள் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த தாலுகா போலீ ஸார், சிலம்பரசனின் சடலத்தை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்து சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது, சிலம்பரசனை போலீஸார் அடித்துக் கொன்றதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சிலம்பரசனின் சடலம் தாராசுரம் இடுகாட்டில் புதைக் கப்பட்டது.

இதையடுத்து, சிலம்பரசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதால் சடலத்தை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதன்பேரில், மறுகூறாய்வு செய்யும்படி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், கும்பகோணம் வட்டாட்சியர் கண்ணன், சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராமச்சந்திரன், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நாகேந்திரன், சிலம்பரசனின் பெற்றோர், மனைவி ஆகியோர் முன்னிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சரவணன், உதயபானு தலைமையிலான மருத்துவக் குழுவினர், தாராசுரம் இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிலம்பரசனின் சடலத்தை நேற்று மீண்டும் தோண்டி யெடுத்து, 3 மணி நேரம் மறு உடற்கூறாய்வு செய்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x