

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் குற்றாலம் வெறிச்சோடியது.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு சாரல் காலம் முழுவதும் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், சுற்றுலாப் பயணிகளை நம்பி பல்வேறு தொழில் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
அருவிகள் வறண்டன
கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் குற்றாலம் அருவிகள் வறண்டு கிடக்கின்றன. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் மட்டும் பாறையை ஒட்டியபடி சிறிதளவு நீர் கசிந்து வருகிறது.
அருவிகளுக்கு செல்ல தடை
இந்த உத்தரவால் சுற்றுலாத் தலமான குற்றாலம் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது.
திருநெல்வேலி
நாகர்கோவில்
தூத்துக்குடி
திருச்செந்தூர் கடற்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் திருச்செந்தூர் கடற்கரை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதியில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று மிகவும் குறைவாகவே இருந்தது.