Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

இரவு நேர ஊரடங்கால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியிலிருந்து - தொலைதூர நகரங்களுக்கு பகலில் பேருந்துகள் இயக்கம் : பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்தது

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், ரயில்களில் பயணி கள் கூட்டம் குறைவாக இருந்தது.

திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு மேல் தொலை தூர இடங்களுக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. திருநெல் வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய நகரங் களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டது.

நகரப் பகுதிகளில் இரவு 9.30 மணிவரை பேருந்து சேவை இருந்தது. திருநெல்வேலியிலி ருந்து காலை 10 மணிக்கு மேல் சென்னை, கோவை, சேலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

திருநெல்வேலியிலிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட தொலைதூர நகரங் களுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவுப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் இல்லை. இதுபோல் திருநெல்வேலி யிலிருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. சென்னை போன்ற தொலை தூர நகரங்களில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ரயில்களிலும் சில பயணிகளே வந்திறங்கினர். தென்காசியில் இருந்து பயணிகளின் தேவைக்கு ஏற்ப தொலைதூர நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் தொலைதூர விரைவு பேருந்துகள் இயக்கப் பட்டன. அனைத்து பேருந்துகளும் முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்ட பிறகு பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை க்கு 8 பேருந்துகளும், கோவை க்கு 3 பேருந்துகளும், பெங்களூரு மற்றும் திருப்பதிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் சுமார் 25 முதல் 30 பேர் பயணம் செய்தனர். பயணிகள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிய வும் அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்புடன் பகல்நேர பேருந்துகள் பயணத்தை தொடங்கின. பயணிகள் ஆர்வத் துடன் வந்தால் கூடுதல் பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில்

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, பெங்களூரு, கோவை, வேளாங்கண்ணி, வேலூர், ஈரோடு, மதுரைக்கு வழக்கத்தைவிட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைப் போன்று சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பகலில் பேருந்துகள் கூடுதலாக இயக்கப் பட்டன. இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமை யில் மாவட்டம் முழுவதும் போலீ ஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நெல்லை எஸ்பி எச்சரிக்கை

இரவு நேர ஊரடங்கு அமலுக்குவந்துள்ள நிலையில் திருநெல் வேலி மாவட்டத்தில் கூடுதல் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். அனைத்து போலீஸ் நிலைய எல்லை பகுதிகளிலும் இரு இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இரவு நேர பணிக்கு செல்வோர் உரிய அடையாள அட்டையை வைத்திருந்தால் மட்டுமே இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் இரவு நேரங்களில் சுற்றித்திரிபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போதும் பகல் நேரங்களில் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 50 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x