கரோனா விதிகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி : ஒலி, ஒளி அமைப்பாளர்கள் உட்பட பலர் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸிடம்  மனு அளிக்க வந்த  ஒலி மற்றும் ஒளி அமைப்பின் உரிமையாளர்கள்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸிடம் மனு அளிக்க வந்த ஒலி மற்றும் ஒளி அமைப்பின் உரிமையாளர்கள்.
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி திருமணம், கோயில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஒலி, ஒளி அமைப்பினர், மேடை மற்றும் மணவறை அலங்காரம் செய்பவர்கள், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரம் சப்ளையர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலும் கரோனா விதிகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 100-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in