ஷேர் ஆட்டோ தீ வைத்து எரிப்பு :

ஷேர் ஆட்டோ  தீ வைத்து எரிப்பு :
Updated on
1 min read

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்த மாரிசாமிமகன் சிவசக்தி (26). இவர் ஷேர்ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டருகே நிறுத்தியிருந்த அவரது ஆட்டோவில் 3 பேர் அமர்ந்து மது குடித்துள்ளனர். இதனை சிவசக்தி தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் ஆட்டோவின் இருக்கையை கிழித்துள்ளனர்.

அதேபகுதியைச் சேர்ந்த போஸ் மகன்கள் இன்னாசி (27), அருள் (22), முத்தையா மகன் ரூபன் (20) ஆகிய 3 பேர் மீது, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிவசக்தி புகார் செய்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த ஷேர் ஆட்டோவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். தலைமறைவான இன்னாசி, அருள், ரூபன் ஆகிய மூவரையும் முத்தையாபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in