Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

தா.பழூர் அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்த தாய் உயிரிழப்பு :

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தீக்குளித்த தாய் உயிரிழந்தார். 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தா.பழூர் அருகே உள்ள பூவந்திகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்(35). விவ சாயியான இவர், பாண்டிபஜார் கிராமத்தில் செல்போன் கடையும் நடத்தி வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(29) என்பவருடன் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு வயதில் இரட்டைக் குழந்தைகளான மகன் தர்ஷன், மகள் தர்ஷினி உள்ளனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்த மகேஸ்வரி நேற்று காலை தனது இரட்டைக் குழந்தைகளுடன் தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

அப்போது, மூவரின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மகேஸ்வரியின் வீட்டுக்குள் சென்று, உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டுள்ளனர்.

எனினும், மகேஸ்வரி சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குழந்தைகள் 2 பேரையும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தைகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

ஜெயபால் கடைக்கு சென்ற பிறகே, மகேஸ்வரி வீட்டில் தீக்குளித்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தா.பழூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x