இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு  :
Updated on
1 min read

சங்கரன்கோவில் அருகே உள்ள அன்னபூரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (68). இவர், நேற்று தனது மனைவி சின்னராமு (65) என்பவருடன் கழுகுமலை- கயத்தாறு சாலையில் நாயக்கர்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னராமு கழுகுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அய்யாபுரம் போலீஸார், விபத்தை ஏற்படுத்திய செட்டிகுளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வேல்ராஜ் (30) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in