ரயிலில் தவறவிடப்பட்ட கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு :

ரயிலில் தவறவிடப்பட்ட  கைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு :
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே மின்சார ரயிலில் தவறவிடப்பட்ட ரூ.50 ஆயிரம் ரொக்கம், பொருட்களை கைப்பற்றி உரியவரிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.

சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(49). இவர் நேற்று முன்தினம் மாலை திருப்பதி கோயிலுக்கு செல்வதற்காக குடும்பத்தினருடன் அம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து, திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது, கருடாத்ரி விரைவு ரயிலை பிடிப்பதற்காக, அவசரமாக மின்சார ரயிலை விட்டு இறங்கியபோது, அந்த ரயிலில் 50 ஆயிரம் ரூபாயுடன் கூடிய கைப்பை மற்றும் பொருட்களை தவறவிட்டுள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் ரயில்வே போலீஸாரிடம் சங்கர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ரயில்வே போலீஸார் திருவள்ளூரிலிருந்து, சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த மின்சார ரயில், நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் நின்றபோது, சங்கரின் பணப்பை மற்றும் பொருட்களை கைப்பற்றினர். பின்னர் அந்த கைப்பை, பொருட்களை சங்கரிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in