Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

சேத்தியாத்தோப்பில் பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைப்பு :

சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டில் பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணி நடந்தது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச்சுவர் சீர மைக்கப்பட்டது.

சேத்தியாதோப்பு வடக்கு மெயின் ரோட்டில் உள்ள பாலம் வழியாகத் தான் சென்னையில் இருந்து வாகனங்கள் சேத்தியாத்தோப்பு, கும்பகோணம், தஞ்சாவூர், அணைக் கரை, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

இதனால் இந்த பாலத்தில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரு பகுதி சேதமடைந்தது. அந்த பாலத்தில் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் சேதமடைந்த தடுப்புச் சுவரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x