Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

போக்சோவில் இளைஞர் கைது :

கே.வி.குப்பம்

மைனர் பெண்ணை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுள்ள மைனர் பெண் கடந்த 4-ம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, கே.ஜி.எப் அடுத்த கோலார் பகுதியில் மைனர் பெண் இருப்பதாக தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அங்கு சென்று விசாரித்தபோது லத்தேரி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (20) என்பவர் தான் மைனர் பெண்ணை ஆசை வார்த்தைக் கூறி அவரை கடத்திச்சென்று வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x