Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

கோயில் நிர்வாகி கொலையில் பேரன் உட்பட 2 பேர் கைது :

விருத்தாசலத்தை அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தில் கோயில் நிர்வாகி கொலை வழக்கில் பேரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தை அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தவலிங்க செல்வராயர்(69). இவர், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். கடந்த 9-ம் தேதி மர்மமான முறையில் செல்வராயர் உயிரிழந்து கிடந்தார்.இதையடுத்து உறவினர்கள் அளித்தப் புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இதில், செல்வராயரின் மகன் வழி பேரனான ரஞ்சித்குமார் (27) என்பவருக்கும், அவரது நண்பர் செல்வக்குமார் (34) என்பவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நேற்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், ரஞ்சித்குமார் தனது மனைவியை தவிர்த்து வேறொரு பெண்ணுடன் கூடா நட்பு கொண்டிருந்ததை செல்வராயர் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமாரும், செல்வக்குமாரும் அவரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x