பள்ளிபாளையத்தில் சாலை மறியல் :

பள்ளிபாளையத்தில்  சாலை மறியல் :
Updated on
1 min read

பள்ளிபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி ஜீவா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியினருக்கு அங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. குறைவாக நீர் விநியோகித்ததால் நாள்தோறும் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், ஊராட்சி நிர்வாகம்எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிருப்தியடைந்த மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் பள்ளிபாளையம் மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையேற்று மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in