Published : 17 Apr 2021 03:14 AM
Last Updated : 17 Apr 2021 03:14 AM

குரோம்பேட்டை பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை முயற்சி :

தாம்பரம்: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(34). இவர் சென்னை, அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று எம்.ஐ.டி. மேம்பாலம் அருகே மாரிமுத்து வந்துள்ளார். அந்த பாலத்தில் நடந்து சென்றவர் திடீரென்று தடுப்புச் சுவற்றின் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் கீழே சாலையில் சென்ற சொகுசு கார் மீது விழுந்து, பின்னர் கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மாரிமுத்துவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாரிமுத்து அனுப்பப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் இவர் குடும்பப் பிரச்சினை, கையில் பணம் இல்லாத விரக்தியில் பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x