பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம் :

மதுரை மாநகராட்சி பொன்முடியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கணினி செய்முறை தேர்வில் பங்கேற்ற பிளஸ் 2 மாணவிகள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாநகராட்சி பொன்முடியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கணினி செய்முறை தேர்வில் பங்கேற்ற பிளஸ் 2 மாணவிகள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 22,812 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அறிவியல் பாடப் பிரிவு மற்றும் ஒரு சில கலைப் பிரிவு மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது.

ஒரு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் 23-ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வின்போது மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம்

இத்தேர்வு 104 மையங்களில் நேற்று தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் செ.அமுதவள்ளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in