Published : 17 Apr 2021 03:14 AM
Last Updated : 17 Apr 2021 03:14 AM

பைக்கில் சென்ற : பெண்ணிடம் : நகை பறிப்பு :

சிவகங்கை சீனிவாசன் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சங்கீதா (38). இவர் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் இட்லி வாங்க பேருந்து நிலையத்துக்கு சென்றார். தொண்டி ரோடு ரயில் மேம்பாலத்தில் இறங்கியபோது, அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மறித்தனர். பிறகு சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். இதில் பாதி சங்கிலி அறுந்த நிலை யில், அத்துடன் அவர்கள் தப்பிச் சென்றனர். சிவகங்கை டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x