வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் :

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குற்றவியல் நீதிமன்றம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட உள்ள திட்டத்தை நீதித்துறை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் இப்போராட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in