கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு :

கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந் தராஜ் (61). இவர் தனது காரில் தருமபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி நேற்று முன்தினம் வந்துக்கொண்டிருந்தார். அப்போது, திருப்பத்தூரில் இருந்து தருமபுரி நோக்கிச்சென்ற லாரி, கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளி திருப்பதி வட்டம் என்ற இடத்தில் கார் மீது மோதியது.

இதில், காரில் இருந்த கோவிந் தராஜ் மற்றும் கார் ஓட்டுநரான காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (45) என 2 பேரும் காயமடைந்தனர். உடனடியாக 2 பேரும் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in