பாட்டி கொலை வழக்கில் பேரன் கைது :

பாட்டி கொலை வழக்கில் பேரன் கைது  :
Updated on
1 min read

மது அருந்த பணம் கொடுக் காததால், பாட்டியைக் கொலை செய்த வழக்கில் பேரனை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அவல்பூந் துறை பாரதி வீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பூவிழி செல்வன் (33). மனநலம் பாதிக்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு, தனது தாய் ஜெலின்மேரியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்த நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த, 95 வயதான தனது பாட்டி காளியம்மாளை அரிவாளால் வெட்டியுள் ளார். இதில் பலத்த காயமடைந்த காளியம்மாள் உயிரிழந்தார்.அறச்சலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பூவிழி செல்வனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in