கடலூரில் வரதட்சணை கொடுமையால் - மனைவி தற்கொலை: கணவர் கைது :

கடலூரில் வரதட்சணை கொடுமையால்  -  மனைவி தற்கொலை: கணவர் கைது :
Updated on
1 min read

கடலூரில் வரதட்சணை கொடுமை யால் மனைவி தற்கொலை செய் தார். இதுதொடர்பாக கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் பரங்கிப்பேட்டை அடுத்த கரிக் குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை அடுத்துள்ள சீனுவாசபுரத்தைச் சேர்ந்த யோகபிரியா(28) என்பவ ருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் நிரஞ்சன் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரமேஷ் தனது பெற்றோருடன் சேர்ந்து யோகபிரியாவிடம், கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தி வந்த தாக கூறப்படுகிறது. இதனால் யோகபிரியா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையெடுத்து உறவினர்கள் அவரை சமாதா னப்படுத்தி ரமேஷ் வீட்டுக்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ரமேஷ் மீண் டும் வரதட்சணை கேட்டு அவரைகொடுமைப்படுத்தியதாக கூறப் படுகிறது. இதில் மனமுடைந்த யோகபிரியா நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நேற்று ரமேஷை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in