Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் - அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் : பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

அம்பேத்கர் உருவப் படத்துக்கு ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காரைக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழக மண்டலத் தலைவர் சாமி திராவிடமணி தலைமையிலானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே சத்திரரெ ட்டியபட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஊர்க்காவலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜபாளையம் அருகே செட்டி யார்பட்டி முகவூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அ.மணிகண்டன் தலைமையில் நடந்தது.

மதுரை

மதுரை தல்லாகுளத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அக்கட்சியினரும், மதுரை நகர் வடக்கு மாவட்ட திமுக பொறு ப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினரும், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் மாநில நிர்வாகி உலக நம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x