Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவிப்பு :

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்றுகொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்கள் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பெருமாள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தண்டபாணி, ஈஸ்வரமூர்த்தி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி அருகே நன்னகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுகசெயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் டேனி அருள் சிங், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, தமிழர் விடுதலைக் களம் மாநில துணைத் தலைவர் சாமி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு தெற்குமாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் தனியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், அமமுக மாநில அமைப்புச் செயலாளர் இரா.ஹென்றி தாமஸ் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலைக்கு கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் செந்தூர் மகேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, திமுக சார்பில் மாவட்ட நிர்வாகி மணி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மகாராஜன், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் நிஜாம், தமாகா சார்பில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், திமுக எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தலித் மக்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் படத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தக்கலை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த முதல் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. நல உதவிகள் வழங்கப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x