தென்காசியில் 1,132 பேருக்கு அபராதம் :

தென்காசியில் 1,132 பேருக்கு அபராதம்   :
Updated on
1 min read

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, சுகாதாரத் துறை,வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அபராதம் விதித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 507 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது. நேற்று 625 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 1,132 பேரிடம் இருந்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in