விழுப்புரம் ஆட்சியர் அலுவலக மைதானத்தில் - நீண்ட நேரமாக நின்ற கன்டெய்னர் லாரிகள் :

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக மைதானத்தில்  -  நீண்ட நேரமாக நின்ற  கன்டெய்னர் லாரிகள் :
Updated on
1 min read

விழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள காவலர் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு 4 வெளிமாநில கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவைகள் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றன. இதனால் விழுப்புரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கொல்கத்தாவிலிருந்து செல்லாத 25 பைசா நாணய மூட்டைகள் கன்டெய்னர் லாரி களில் சேலம் உருக்காலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அவைகள் இரவில் பயணிக்கக் கூடாது. அதனால் மாலை வேளை களில் அருகில் உள்ள காவல் நிலை யத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப் புடன் இரவு அங்கேயே தங்கி, மறுநாள் காலை புறப்பட்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி கன்டெய்னர் லாரிகள் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் காவலர் மைதானத்தில் நிறுத்தப்பட்டன. நேற்று காலை 5 மணிக்கு அவைகள் சேலம் புறப்பட்டு சென்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in