பசுமை தீர்ப்பாய தலைவர் ஆய்வு :

பசுமை தீர்ப்பாய தலைவர் ஆய்வு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, பசுமை குடில்கள் மூலம் உரமாக மாற்றப்படுகின்றன. இதற்காக 6 இடங்களில் பசுமை உர நுண் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் பணிகளை சென்னை பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங் உடனிருந்தனர். இங்கு பணியின் நிலை நன்றாக இருப்பதாக நீதிபதி பாராட்டினார்.

இதேபோல், புளியங்குடி நகராட்சியிலும் குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்றும்பணிகளை பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி பார்வையிட்டார். மண்டல நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் இளங்கோவன், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரோமன் டெரிக் விண்டோ உடனிருந்தனர்.

நாகர்கோவில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in