Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

5 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம், ஸ்கூட்டர் திருட்டு :

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யம் பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முரளி(30). தனியார் நிறுவன மேலாளரான இவர், அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந் தார். இந்நிலையில், முரளியின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம், 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர் ஆகியவை திருடு போனது நேற்று தெரியவந்தது.

இதேபோல, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை ரோஜா நகரில் வசித்து வரும் பரிதா பானு தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயி ரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து, பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x