விபத்தில் பெண் உயிரிழப்பு :

விபத்தில் பெண் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், கடையத்தில் இருந்து தென்காசி நோக்கி நேற்று மாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. கடையம் அருகே எல்லைப்புளி பகுதியில் சென்றபோது, பேருந்து மீது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், பேருந்தில் சென்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடையம் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in