சிதம்பரம் அருகே - வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது :

சிதம்பரம் அருகே  -  வழிப்பறி செய்தவர்  குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

சிதம்பரம் அருகே வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிவபுரியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டியன் (62). இவர் கடந்த மாதம் 6-ம்தேதி சிதம்பரம் அருகே உள்ளவேளக்குடி ஏழு பிடாரி அம்மன்கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந் தார். அப்போது சிவபுரி கிராமத் தைச் சேர்ந்த ரவுடி ரமேஷ்(37) அவரை வழிமறித்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுதொடர்பாக பாண்டியன் அண்ணாமலைநகர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து ரமேஷ் கைது செய்யப் பட்டார்.

அவர் மீது மணல் கடத்தல், திருட்டு மற்றும் அடிதடிவழக்குகள் என 12 வழக்குகள் உள்ளன. அவரின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்பி  அபிநவ் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, குண்டர் தடுப்பு சட்டத்தில் ரமேஷை கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள ரமேஷிடம் வழங்கப்பட்டது.ரமேஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in