Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

கரோனா பரவல் தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து - அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை :

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து துறை செயலாளருமான சி.சமயமூர்த்தி முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது.இந்த கூட்டத்துக்கு மாவட்டஆட்சியர் அ.ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து துறை செயலாளருமான சி.சமயமூர்த்தி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கரோனா தாக்கத்தைக் கட்டப்படுத்த அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுபடுத்த அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவற்றை நடத்தி வீடுவீடாகச் சென்று காய்ச்சல், சலி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும், நோய் உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கவும் அனைத்து துறை பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முஜ்பூர் ரகுமான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குநர் தர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x