

திருவள்ளூர் மாவட்டம், கீழானூர் அடுத்த சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மனோகர் மகள் மோகனா (35). இவருக்கும், பாப்பன்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, ரவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே, மோகனா தனது 2 மகள்களுடன் பாப்பன்சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதற்கிடையே, கணவரின் சொத்தைப் பிரிப்பதில் பிரச்சினை இருந்து வந்ததால், மன உளைச்சல் அடைந்து தனது சொந்த ஊரான சிட்டத்தூருக்கு குழந்தைகளுடன் வந்து தங்கினார்.
ஏற்கெனவே, மன உளைச்சலில் இருந்த மோகனா திடீரென வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்தார். இதனால், அவர்கள் மூவரும் மயக்கம் அடைந்தனர்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொண்டு போய் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மோகனா உயிரிழந்தார். இதுகுறித்து, தந்தை மனோகர் அளித்த புகாரின்பேரில், வெங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி உயிரிழப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்தாபுதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.