குவாரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து - கிராம மக்கள் தொடர் போராட்டம் :

குவாரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து -  கிராம மக்கள் தொடர் போராட்டம் :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த புன்னப்பாக்கம் பகுதியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, மண் அள்ளப்பட்டால் புன்னப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என ஏற்கெனவே அப்பகுதி மக்கள் இருமுறை போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், குவாரியில் மீண்டும் அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாக கூறி, புன்னப்பாக்கம் கிராம மக்கள் மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, அவர்கள் அங்கேயே சமையல் செய்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in