வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் :

வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏப்.22 அன்று திறக்கப்பட உள்ளது. இம்முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நேற்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியு றுத்தி ஏப்.16 அன்று பெரம்பலூ ரில் உண்ணாவிரதப் போராட்டமும் ஏப்.19 அன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்போவதாக பெரம்பலூர் பார் அசோசியேசன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in