Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சிக்க மாரண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ரஞ்சித்குமார் (21). இவர் டிப்ளமோ பயின்று வந்தார்.

இந்நிலையில், சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்காக நேற்று ஒகேனக்கல்லுக்கு சென்றனர்.காவிரி ஆற்றில் ரஞ்சித்குமார் குளித்து கொண்டிருந்த போது திடீரென மாயமானார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சித்குமாரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

இதுதொடர் பாக ஒகேனக் கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x