Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கான கோயில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஸ்டேட் வங்கியின் மதிப் பீட்டாளர்களை பரிந்துரைக்க பாரத ஸ்டேட் வங்கியை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது.
இதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன் றம், நிலத்தை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும்படி கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்ற நியமித்த குழு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘ கோயில் நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தின் சந்தைவிலை அடிப்படையில் செண்டுக்கு ரூ.36 ஆயிரத்து 850 வீதம் 34 ஏக்கருக்கு ரூ. 12.82 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்டசதவீதமான ரூ.1.60 லட்சம் மாதவாடகையாக நிர்ணயி்க்கப்பட்டுள் ளது, என்றார்.
தமிழக அரசின் இந்த கணக் கீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர், அப்பகுதியில் கடைசி யாக ஒரு செண்ட் நிலம் ரூ.3.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், 34 ஏக்கர் கோயில் நிலத்துக்கு ரூ.133 கோடி ரூபாய் சந்தை விலையாக உள்ளது என்றும், அதன்படி ரூ.66 லட்சத்தை மாத வாடகையாக நிர்ணயித்து கோயில் நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும், என வாதிடப்பட்டது.
நீதிமன்றம் நியமித்த குழுவின் மதிப்பீட்டுக்கும், மனுதாரர் தரப்பு கணக்கீட்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால் கோயில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஸ்டேட் வங்கியின் மதிப் பீட்டாளர்கள் 3 பேரை பரிந்துரைக்க பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொதுமேலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.19-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT