Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

மார்த்தாண்டத்தில் மெத்தை விற்பனை கடையில் ரூ.7 லட்சம் திருட்டு :

நாகர்கோவில்

நாகர்கோவிலை சேர்ந்தவர் சிவசுப்புராஜ். இவர், நாகர்கோவில், மார்த்தாண்டம் பம்மம் ஆகிய இடங்களில் மெத்தை, காட்டன் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று காலை சிவசுப்புராஜ் மார்த்தாண்டத்தில் உள்ள கடையை திறந்து உள்ளே சென்றபோது பட்டறையில் வைத்திருந்த ரூ.7 லட்சம் பணத்தை காணவில்லை. கடையின் மாடியில் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதும், அதன் வழியாக உள்ளே புகுந்த நபர்கள் பணத்தை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

தகவலறிந்த மார்த்தாண்டம் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். கடையில்பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், அக்காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கையும் காணவில்லை. அதை கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர். தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படையினர் சோதனைக்கு பயந்து சிவசுப்புராஜ் பணத்தை எடுத்துச் செல்லாமல் கடையில் வைத்திருந்ததை அறிந்தே திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடையை திறந்து உள்ளே சென்றபோது பட்டறையில் வைத்திருந்த ரூ.7 லட்சம் பணத்தை காணவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x